Tuesday, May 27, 2014

கவியரசி MEHNAS RINA வின் கவி வரிகள் ...

உயிரானவனே! உன்னுடன் நடக்கும் சாலையில் ஒற்றை பூச்செடி கேட்டேன் – நீ மலர்ச்சாலையை பரிசளிக்கிறாய்… ******** உன்னுடன் கால் புதைக்கும் கடல் மண்ணில் சிப்பிகள் கேட்டேன் - நீ கைக் குட்டை நிறைய முத்துக்களை பொறுக்கி நீட்டுகிறாய்….. ******* உன்னுடன் ரசித்த இரவு வானில் கைக்குள் பிடித்து அழகு பார்க்க ஒரே ஓரு நட்சத்திரம் கேட்டேன் – நீ கூடை நிறைய விண்மீன்கள் கொய்து தருகிறாய்….. ******** இன்னும் ஒரே ஓர் ஆசை –என்றும் உன்னிடத்தில் கேட்பவள் நானாகவும் கொடுப்பவன் நீயாகவும் இருக்க வேண்டும் வாழ்வின் எல்லை வரை…….. வா கைகோர்க்கலாம் எனதே எனதாக நீயும் உனதே உனதாக நானும்….. ********* MEHNAS RINA

Monday, April 7, 2014

RASSAKS PALAMUNAI (1)

பாடங்களாக நீ இருந்திருந்தால் பரீட்சைகளையும் காதலிப்பேன்