Thursday, July 24, 2014
Tuesday, May 27, 2014
கவியரசி MEHNAS RINA வின் கவி வரிகள் ...
உயிரானவனே!
உன்னுடன் நடக்கும்
சாலையில் ஒற்றை
பூச்செடி கேட்டேன் – நீ
மலர்ச்சாலையை
பரிசளிக்கிறாய்…
********
உன்னுடன் கால் புதைக்கும்
கடல் மண்ணில்
சிப்பிகள் கேட்டேன் - நீ
கைக் குட்டை நிறைய
முத்துக்களை பொறுக்கி
நீட்டுகிறாய்…..
*******
உன்னுடன் ரசித்த
இரவு வானில்
கைக்குள் பிடித்து
அழகு பார்க்க
ஒரே ஓரு நட்சத்திரம்
கேட்டேன் – நீ
கூடை நிறைய விண்மீன்கள்
கொய்து தருகிறாய்…..
********
இன்னும் ஒரே
ஓர் ஆசை –என்றும்
உன்னிடத்தில்
கேட்பவள் நானாகவும்
கொடுப்பவன் நீயாகவும்
இருக்க வேண்டும்
வாழ்வின் எல்லை வரை……..
வா கைகோர்க்கலாம்
எனதே எனதாக நீயும்
உனதே உனதாக நானும்…..
*********
MEHNAS RINA
Thursday, April 24, 2014
Monday, April 7, 2014
Subscribe to:
Posts (Atom)